2022 யூலை 30 ஆம் நாள் சனிக்கிழமை வவுனியா மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்க்கு முன்பாக நடைபெற்றது இனப்படுகொலையாளி கோட்டாபாய ராசபக்சவை உலக நாடுகள் அரசியல்புகழிடம் கொடுக்காமல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி ஈழத்தமிழருக்கு நீதிவழங்க முன்வரவேண்டும்.உலகத்தில் எந்த நாடுகளும் இனப்படுகொலையாளருக்கு எதிராக சட்ட ஒழுங்குகளைப் பயன்படுத்தி கைது செய்து அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களால் குரல் எழுப்பப்பட்டது..