ஈழத்தமிழர்கள் பிரிந்துசென்று தமது இறைமையை பாதுகாக்கக்கூடிய தன்னாட்சி நிறைந்த தமிழீழ அரசின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியுடையவர்கள் என்பது 1948ம் ஆண்டு ஈழமண் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தகாலத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன ஒடுக்குமுறைகளும் தமிழின அழிப்பும் உலகநாடுகளின் முன் தமிழீழ மக்கள் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்..
காலம்கடந்து ஞானம் பிறந்தது போன்று இன்று சிங்கள மக்கள் தமது சோத்துச்சண்டையில் தமிழ் மக்களுக்கு ஆதரவுபோன்று குரல் கொடுப்பதைப்பார்த்தால் சிங்கள அரசியல்வாதிகள் சிங்களப்படைகள் பலதடவை நம்பவைத்து தமிழ் மக்களின் கழுத்தை அறுத்த பல நிகழ்வுகள் தான் நினைவுக்கு வருகிறது அப்பொழுதெல்லாம் எந்த சிங்கள மக்களாக இருந்தாலும் சரி சிங்களஅரசியல்வாதியாக இருந்தாலும்சரி 2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் சந்தித்த கொடூர தமிழின அழிப்புப் போரை தடுத்து நிறுத்தவோ, தமிழ் மக்களை பாதுகாக்கவோ எந்தவகையான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை. சிங்கள மக்களும் புனித இசுலாத்தை தழுவிய தமிழ் மக்களும் தமது நாட்டில் ஒரு சகோதர இனம் தமது நாட்டுப்படைகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும்போது அக மகிழ்ந்து வெற்றிவிழா கொண்டாடினார்கள். அக்காலத்தில் தமிழ் பேசும் இசுலாமியரான ரவூக் கக்கீம் சிங்கள அரச அவையில் நீதி அமைச்சராக இருந்தபோது அரபிய நாடுகளுக்கெல்லாம் சென்று தன்நலம் கருதி தமிழின அழிப்பை மூடிமறைத்து தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்த வரலாற்று துரோகத்தை உலகத்தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
தமிழ் மக்கள் பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்கும் உரிமை உண்டு. ஈழமண் 20000 ஆண்டுக்கு மேலாக தமிழ் மக்களின் தொன்மை மண். தமிழ் மக்கள் தமது தொன்மைமொழி பண்பாடு, இறை வழிபாட்டு அடையாளங்கள், விழுமியங்களை கொண்டு வாழ்ந்த வரலாறு உண்டு என்பதை அனைத்து மக்களும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
பௌத்தம், இசுலாம், கிறித்தவம், உருவாகும் முன்னே சைவ வழிபாடு தமிழ் மக்களின் மரபுவழி வழிபாட்டை அடையாளப்படுத்தி உள்ளதை வரலாறு எமக்கு கற்பித்து நிற்கிறது.வரலாற்றில் தமிழ் மக்கள் ஏமாந்து அழிந்து போனது போதும், சமகாலத்தில் தமிழின அழிப்பை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு செய்த இனப்படுகொலையை அனைத்துலக சட்டத்தின் பார்வையில் பார்த்தால் தமிழருக்கான தன்னாட்சி அமைக்கும் தகுதி ஈழத்தமிழர்களுக்கு உண்டு என்பதை அனைத்துலக சட்டமும் விடுதலை அடைந்த நாடுகளின் வரலாறும் உறுதிப்படுத்தி நிற்கின்றது.
Article I
The Contacting Parties conform that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.
அமைதியான காலத்திலும் போர்க்காலத்திலும் அனைத்துலக சட்ட விதிமுறைகளையெல்லாம் மீறி மனிதயுரிமைக்கு எதிரான அத்தனை கொடூரத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக
சிங்கள இவெறியரசும் அதன் சிங்களப்படைகளும் செய்தது மட்டுமல்ல சர்வதேச விசாரணையை அனுமதிக்கவில்லை.
Article II
In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or part, a national, ethnical, racial or religious groups, as such:
பாதுகாப்பு வலயமென அறிவித்து அந்த இடத்தில் மக்களை இலக்குவைத்து வான் தாக்குதலும் பல்குழல் எறிகணை தாக்குதல் நடத்தி மக்களை கொன்றது மட்டுமல்ல மருத்துவமனையும் தாக்கி அளிக்கப்பட்டது.
(a) killing members of the group; வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் கிறித்தவ பாதிரியார் முதல் பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் எனப்பலர்.
(b) causing serious bodily or mental harm to members of the group; சரணடைந்தோர் கைதிகளாக பிடிபட்டோர், சந்தேகத்திற்குரியவர் என ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி சட்டத்திற்குப் புறம்பான வகையில் கொடூரமாக சித்திரவதைகளைச் செய்து படுகொலை செய்தது.
(c) deliberately inflicting on the group conditions of life calculated to being about its physical destruction in whole or in part, பலரை கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தி பலவீனப்படுத்தி பலமற்றமக்களாக்கியமை மட்டுமல்ல அவர்களின் வாழ்நாட்கள் குறுகியதாக்கி பலர் ஒருசில ஆண்டுக்குள் இறந்து போனார்கள்.
(d) imposing measures intended to prevent births within the group; 18/05 2009 ம் ஆண்டு போர் முடிவடைந்ததும் பலர் வலுக்கட்டாயமாக குழந்தை தடை தடுப்பூசி போடப்பட்டார்கள் அது தமிழர்களின் இனப்பெருக்கத்தை தாய் நிலத்தில் குறைக்கும் நோக்கோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.
(e) possibly transferring children of the group to another group. 2009 ஆண்டில் போர் முடிந்ததும் போரால் கொல்லப்பட்டு தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் கடத்தப்பட்டார்கள். சிலர் தாய் தந்தையர் இருந்தும் கடத்தப்பட்டு அவர்கள் எங்கே என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இன்றும் பெற்றோர்கள் தேடுகிறார்கள்.
இன்று சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தமது சொந்த நாட்டு மக்களை சூரையாடி கொலைசெய்யத் துணியும் பௌத்த சிங்கள அரசுடனும் தமிழின அழிப்பை வெற்றிவிழாவாக கொண்டாடிய சிங்கள மக்களுடனும் சேர்ந்து வாழ்ந்து இதுவரை காலமும் தமிழ் மக்கள் சந்தித்த பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள், (தமிழின அழிப்பு ) போதும்
எதிர்வரும் காலத்திலாவது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழத்தில் அடுத்த சந்ததியை கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலைப்படுத்தி தமிழர்கள் நாம் சமத்துவமாக கௌரவமாக ஆட்சி அமைப்பதே சாலச் சிறந்தது அதுவே சிங்கள மக்களை மேலும் அவர்களின் கல்வி பொருளாதாரத்தில் உயர்த்திசெல்லும் என்பதை சமகால நிலமை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.
செய்தி தயாரிப்பாளர் :த தயீசன்