மாமனிதர் கமலாம்பிகை கந்தசாமி அம்மையார் இறப்புத் திருவோலை 

தமிழீழம் யாழ்ப்பாண மாநிலம் காரைநகரில் 1941 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார்.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.கனடாவை வாழ்விடமாக கொண்டவர்.இவரின் கணவர் கதிரமலை கந்தசாமி இளைப்பாறிய கிராமசேவகர் ஆவார்.வதனி மற்றும் காலம்சென்ற திவாகரன் அவர்களின் அன்புத்தாயார்.யெனிபர் அவர்களின் அன்புப் பேத்தி ஆவார்.

கமலாம்பிகை கந்தசாமி அம்மையார் 1969 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை சிங்கள அரச பணியில் மருத்துவ பணியாளராக பணிபுரிந்தார்.தமிழ்த்தேசியத்தின் உயிராக வாழ்ந்தவர்.தமிழீழ மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிய பெருந்தமிழர்.1971 ஆண்டு முதல் தமிழ்த்தேசியப் பணியில் முழுமையாக தம்மை ஈகம் செய்தவர். கமலாம்பிகை கந்தசாமி அம்மையார்.

தமிழீழப் போரில் சிங்கள அரசால் முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பில் போர்க்களத்தில் நேரடிச்சாட்சியாக எம்மோடு வாழ்ந்தவர்.1971 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை கிட்டதட்ட 51 ஆண்டுகள் தமிழின அழிப்பில் நேரடிச் சான்றாக இருந்தவர் மாமனிதர் கமலாம்பிகை கந்தசாமி.

தன் உயிரை கொடுத்து போர்க்களத்தில் தமிழினத்தின் துயரிலும் மருத்துவப்பணியிலும் அளப்பரிய பங்காற்றிய மாமனிதர் கமலாம்பிகை கந்தசாமி அம்மையாருக்கு உலகத் தமிழர்களின் வீரவணக்கம்.

அம்மையார் கமலாம்பிகை கந்தசாமி அம்மையாரை சில சருகுப்புலிகள் சுற்றிவளைத்து தமது அரசியலுக்கு பயன்படுத்தினார்கள்.அம்மையாரை தமிழின அழிப்பின் சாட்சியாக வைத்து கனடா மண்ணில் இன அழிப்புக்கான நீதியை நிலை நாட்டக்கூடிய எந்த அரசியலையும் சருகுப்புலிகள் முன்னெடுக்கவில்லை.சருகுப்புலிகள் செய்யும் அரசியல் பணம் திரட்டுவதில் மட்டுமே.அம்மையாரை தமது வலைக்குள் கட்டிவைத்து சிங்கள அரசுக்கு துணைநின்றவர்கள் சருகுப்புலிகள்.

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

தன்னாட்சி நிறைந்த தமிழீழ அரசை நிறுவும்வரை நாம் போராடுவோம்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE